Arunprabhus's Blog

ஜூன் 8, 2010

சத்தியத்திற்கு ஒரு சோதனை

Filed under: உண்மை — arunprabhus @ 5:50 முப

கம்யூனிசம், பாசிசம், கேப்பிட்டலிச தத்துவங்கள் போல் காந்தியின் தத்துவங்கள் ‘காந்தியம்’ ஆக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பல்கலைகழகங்களிலும் Gandhian Thoughts ஒரு பாடமாக வைக்கப்பட்டு இளங்கலை முதுகலை பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த தத்துவங்கள் எந்த அளவு உலக நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது , இந்த பாடத்திட்டத்தை நடத்தும் இந்திய அரசும் மக்களும் இன்று எப்படி இதை கடைபிடிக்கிறார்கள். ஒரு மதிப்பீடு.

கொள்கை 1 : சுவதேசி

காந்தியக் கொள்கையிலேயே ‘ரொம்ப நகைச்சுவையாய்’ போனது இந்த கொள்கை தான்.  காந்தி இன்றிருந்தால் இந்தியாவின் கதவை திறந்துவிட்ட காங்கிரசைப் பார்த்து ‘என்ன வெச்சு காமெடி கீமடி பண்லேயே’ என்று கேட்டிருப்பார். கோக கோலா முதல் உருளைக்கிழக்கு சிப்ஸ் வரை அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். உலகமயமாக்கலில் காந்தியின் பொருளாதரம் காற்றில் பறந்து கால் நூற்றாண்டு ஆகப்போகிறது.

கொள்கை 2 :  மதுவிலக்கு

மதுவிலக்கு அமல்..ரத்து என்ற வசனங்கள் எல்லாம் மாறிப்போய் மதுக்கடைகளை அரசே நடத்தும் காலம் இது.  தமிழகத்தில் வீட்டுக்கு ஒரு வண்ண தொலைக்காட்சி பெட்டியும் ஒரு குடிகாரனும் கட்டாயம் உண்டு. இரண்டுக்கும் உபயம் தமிழக அரசு. இந்தியாவில் மதுவிலக்கு எந்த மாநிலத்திலும் அமலில் இல்லை என்பது நிதர்சனம்.

கொள்கை 3 :  மாமிசம் உண்ணாமை

பசு வதை மிகப்பெரிய பாவமாக பார்க்கப்பட்ட நாட்கள் போய், இன்று பட்டிதொட்டி யெங்கும் பீப் பிரியாணி கடைகள் பட்டையை கிளப்புகின்றன்.  கோயிலுக்குள்ளேயே கோழி, ஆடு பலியிடுவதை தடைசெய்ய முடியவில்லை. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

கொள்கை 4 : அகிம்சை

உலகமே குறுக்கே நின்றபோதிலும் கடத்தல் வழியிலாவது செய்தே தீருவோம் என்று அனுகுண்டு செய்து வைத்திருக்கிறது  இந்திய அரசு. உலகத்தின் தேவை அப்படி. பிறநாடுகளை விட்டுவிடுங்கள். உள்நாட்டிலேயே வாழ்வாதாரம் தேடி போராடும் நக்சல்களை நசுக்கவும் ஆயுதம் இன்றி அரசால் போராட முடியவில்லை.

கொள்கை 5 : மதசார்பின்மை

காந்தியின் மதசார்பின்மை வித்யாசமானது. ஜின்னாவை முதல் முறை சந்திக்கும் போதே ‘ஒரு முஸ்லீம் தலைவரை சந்திப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று அவருக்கு மத முத்திரை இடுகிறார்.  எப்போதும் முஸ்லீம்களையும் இந்துக்களையும் வேறுபடுத்தி அடையாளப்படுத்துகிறார். ஆனால் அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார்.  இதே சவசவ மதசார்பின்மையை தான் இந்திய அரசும் வழி தொடர்கிறது. காந்தி பிறந்த குஜராத்திலேயே ரத்தம் கொட்டிக்கொண்டே இருக்கிறது. மதச்சார்பின்மை என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரசும் ஆரம்ப காலம் முதல் முஸ்லீம் லீக் கட்சியிடன் கூட்டணி வைத்துக்கொள்கிறது.

கொள்கை 6 : சாதி மறுப்பு

இதிலும் மதசார்பின்மை பாணியில் சாதிகளை அடையாளப்படத்திவிட்டு பின் அவர்களை ஒற்றுமையாக வாழ வைக்க முயல்கிறார் காந்தி.  ஹரிஜன்ஸ் என தாழ்த்தபட்டவர்களுக்கு அவர் வைத்த அடையாள பெயரை அவர்களே இன்று ரசிக்கவில்லை. தலித் இயக்கம், தாழ்த்தப்பட்டவர்கள் இயக்கம் என்பதே அவர்களை குறிக்கும் சரியன இடுசொல்லாக இருக்கிறது.  காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் அந்த பகுதியில் அதிகமாக உள்ள சாதியினர் யார் என்பதை கொண்டே வேட்பாளரை அறிவிக்கின்றது. சாதிக்கட்சிகளுடன் கூட்டணியும் வைக்கிறது.  தேர்தல் முதல் வேலை வரை அம்பேத்கரும், பெரியாரும் விதித்த இடஒதுக்கீடு முறையே உண்மையான சமுகநீதி மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.

உலக நடைமுறையில் காந்தியம் சுத்தமாக தோல்வியடைந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகிவிட்டது.

காந்தியமும் கடவுள் போல் தான். இருந்தா நல்லாயிருக்கும் .. ஆனா இல்லையே !!

கடவுள்-காந்தி இருவரும் அவர்கள் பெயரைச் சொல்லி சிலர் பிழைப்பு நடத்துவதர்க்குத்தான் பயண்படுகிறார்கள்.

ஜூன் 5, 2010

இப்படியாக உலகம் !!

Filed under: உண்மை — குறிச்சொற்கள்: — arunprabhus @ 7:19 முப

வழவழ கொழகொழ சவசவ அரசியல்வாதிகளையும் போராட்டக்காரர்களையும் ரசிக்கும் அரசாங்கங்கள், நேர்மையுடன் போராடும் எந்த எழுச்சியாளர்களையும் ஏன் அங்கீகரிப்பதில்லை. அதுவும் அவர்கள் வாழும் காலத்தில் முடிந்த அளவு அவர்களை படுத்துகிறது.

வெள்ளையரின்  ‘Defence of India Act’ அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் குண்டு வீசும் போதும், கவனமாக திட்டமிட்டு எந்த உயிரிழப்பும் இல்லாமல் அதை செய்கிறார் பகத்சிங்.  ‘it takes a loud voice to make the deaf hear’ என துண்டு பிரசுரம் வீசி தன் செயலின் காரணத்தையும் சொல்லிவிட்டு போகிறார்.

ஆனால் ‘கலவரத்தை தவிர்க்க லாகூர் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கிலிடுங்கள் என ஆங்கிலயருக்கு ஆலோசனை தருகிறார்’ கரம்சந் காந்தி. ‘The government certainly had the right to hang these men’ என்று எழுதுகிறார் அந்த அகிம்சா மூர்த்தி.

முதல் ஒத்துழையாமை இயத்தின்  தீவிரத்தை குறைக்க ஏற்படுத்தபட்ட ‘காந்தி-எர்வின்’ சமரச ஒப்பந்தத்தில் பகத்சிங்கின் தூக்கு பற்றி எதுவும் குறிப்பிடாமல் அனைவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கியது காங்கிரஸ் மற்றும் வெள்ளையர் அரசாங்கம். (சான்று : வீக்கி – http://en.wikipedia.org/wiki/Bhagat_Singh)

இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்று ஒலித்த பகத்சிங்கின் குரல்வளையை 23 வயதிற்குள் உலகம் நொருக்கிவிட்டது.

அதே போல் புரண சுதந்திரம் கேட்ட நேதாஜியை விட தங்கள்அரசாங்கத்திற்கு கீழ்படிந்த சுயாட்சி இந்தியா (  ‘domanian status’) கேட்ட காந்தியைத் தான் பிரிட்டிஸ் அரசாங்கத்திற்கு பிடித்தது.   போகும் போது தங்கள் சவசவ அரசியல் நண்பன் காங்கிரஸ் கையில் நாட்டை ஓப்படைத்தது.

பணக்கார குடும்பத்தில் பிறந்து மருந்துவரான சேகுவாரா உலகத்தை பிடித்து ஆட்டிய Imperialism ஒழிய காடுகளிலும் மலைகளில் தரிந்து போராடியவர். அவரை பயங்கரவாதி என்ற அமெரிக்க அரசு மக்கள் செல்வாக்கில்லாத சர்வாதிகாரியான பட்டிஸ்டா (Batista) வை ஆதரித்தது.

பெற்ற அன்னைக்கும் கூடப்பிறந்த உறவுகளுக்கும் கூட எதையும் கொடுக்க விரும்பாத இந்த  சுயநல காலகட்டத்தில், தாங்கள் நேசித்த மண்ணிற்காக தங்களையே  தானம் செய்த தியாகச் சுடர்கள் புலிகள். அவர்கள் ஒவ்வொருவரும் பகத்சிங்காவும், நேதாஜியாகவும், சேகுவாராகவும் வாழ்ந்து மடிந்தவர்கள்.

தாங்கள் நம்பிய தனி ஈழ கொள்கையில் கொஞ்சமும் மாறாமலும் போராட்டத்தின் நேர்மை குறையாமலும் போராடியவர்கள் புலிகள்.

ஊருக்கு நடுவில் ஒளிந்து கொண்டு  கலவரம் செய்யமாட்டர்கள்.  ஊரையே கட்டியாண்டு  தாங்கள் நினைத்த தனிநாடு நடத்துவார்கள். பொதுமக்களுக்கு குண்டு வைத்து அரசியல் நடத்த மாட்டர்கள். தங்களையே குண்டாக்கி அரசியல் எதிரிகளோடு மோதுவார்கள். விமானத்தை கடத்தி பொது மக்களை கொல்ல மாட்டார்கள். துணிந்து இறங்கி ரானுவ விமானத்தளத்தையே பிரித்து மேய்வார்கள்.  மதத்தின் பின்னாலோ.. வல்லரசுகளின் பின்னாலோ ஒளிந்து கொண்டு போர் செய்ய மாட்டார்கள். தங்கள் இன விடுதலைக்காக பிறரை நம்பாமல் தங்களையே பணயம் வைத்து போராடுவார்கள்.

சமசரம் இல்லாத கொள்கை பிடிப்பையும், கொஞ்சமும் விலகாத இந்த நேர்மையையும் தான் உலகம் ரசிக்கவில்லை.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.