Arunprabhus's Blog

பிப்ரவரி 12, 2011

காங்கிரஸ் பிறந்த கதை

Filed under: Uncategorized — arunprabhus @ 10:43 பிப

காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்கம்

** வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக்கிடந்ததை பொறுக்க முடியாத சில தேசபக்தி மிக்க இளைஞர்கள் ஒன்று கூடி காங்கிரஸ் இயக்கத்தை தொடங்கினர் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.  ஆலன் ஆக்ட்டிவியன் ஹமே என்ற பிரிட்டிஷ் வெள்ளையரால் காங்கிரஸ் தொடங்கப்பட்டது.

** காங்கிரஸின் தந்தை எனப்படும் இந்த ஹமே யார் ? இந்தியாவின் முதல் சுதந்திர போர் எனப்படும் சிப்பாய் கலகத்தை பல ரானுவ நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்படுத்திய பிரிட்டிஷ் முன்னால் ரானுவ அதிகாரி இவர். 1884ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தியாசபிகல் சொசைட்டி நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஹமே, அங்கு தன் நண்பர்கள் 17 பேருடன் காங்கிரஸ் இயக்கத்தை தொடங்கினார்.

**  முதல் உலகப்போரின் முடிவில் இங்கிலாந்து அரசாங்கம், கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவை பிரிட்டிஷ் ராஜ் என்ற ஒரு நிலையான அரசாக மாற்றியது . அரசாங்கம் எளிதாக இயங்க, பிரிட்டிஷ் மேலாதிகத்தை முழுதும் ஏற்றுக்கொண்ட ஆங்கிலம் தொிந்த சேவகர்கள், எழுத்தர்கள்,  வக்கீல்கள்,  பணக்காரர்கள் தேவையிருந்தது.  வெள்ளையர்களுக்கும் இவர்களுக்கும் தங்களுக்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ளும் ஒரு பொதுவான தளமாக காங்கிரஸ் விளங்கியது

காங்கிரஸ் மகாசபை தொடக்கம்

**1885 ஆண்டு இந்திய வைஸ்ராய் “லார்டு டுபாரின்” வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் சபை மும்பையில் கூட்டப்பட்டது.  வெள்ளையர்களும், ஆங்கிலம் படித்த இந்திய உயர்சாதி பார்சிகளும் பிராமணர்களுமாக 72 போ் கலந்து கொண்டனர்.  காங்கிரசை தொடங்கிய ஆலன் ஆக்ட்டிவியன் ஹமே பொதுச்செயலராக பதவியேற்றுக்கொண்டார்.  கல்கத்தா வெள்ளையர் நீதிமன்றித்தில் வழக்கறிஞராக இருந்த “உமேஷ் சந்திர பனர்ஜி” அவைத்தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டார்.

**1885ம் ஆண்டு முதல் 1907 ஆண்டு வரை, ஒரு சடங்காக காங்கிரசு மகாசபை ஆண்டுக்கு ஒரு முறை கூடும். தங்களுக்குள் தலைவர் செயலர்களை தோ்ந்தெடுக்கும். காங்கிரஸில் இருந்த பணங்காரர்களுக்கு மேலும் சில பட்டங்களும் பதவிகளும் வேண்டி தீர்மானம் இயற்றும் . அல்லது சில தொழில் சலுகைகளையும் வரிக்குறைப்பையும் கேட்கும்.

** 1881ம் ஆண்டு சிப்பாய் கலகம் ஏற்படுத்திய விடுதலை வேட்கையை நீர்த்து போக வைக்க வெள்ளையர்களால் வஞ்சகமாக தொடங்கட்ட காங்கிரஸ், இந்த 20 ஆண்டுகளில் அந்த வேலையை கச்சிதமாக செய்தது.

ஜூன் 8, 2010

சத்தியத்திற்கு ஒரு சோதனை

Filed under: உண்மை — arunprabhus @ 5:50 முப

கம்யூனிசம், பாசிசம், கேப்பிட்டலிச தத்துவங்கள் போல் காந்தியின் தத்துவங்கள் ‘காந்தியம்’ ஆக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பல்கலைகழகங்களிலும் Gandhian Thoughts ஒரு பாடமாக வைக்கப்பட்டு இளங்கலை முதுகலை பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த தத்துவங்கள் எந்த அளவு உலக நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது , இந்த பாடத்திட்டத்தை நடத்தும் இந்திய அரசும் மக்களும் இன்று எப்படி இதை கடைபிடிக்கிறார்கள். ஒரு மதிப்பீடு.

கொள்கை 1 : சுவதேசி

காந்தியக் கொள்கையிலேயே ‘ரொம்ப நகைச்சுவையாய்’ போனது இந்த கொள்கை தான்.  காந்தி இன்றிருந்தால் இந்தியாவின் கதவை திறந்துவிட்ட காங்கிரசைப் பார்த்து ‘என்ன வெச்சு காமெடி கீமடி பண்லேயே’ என்று கேட்டிருப்பார். கோக கோலா முதல் உருளைக்கிழக்கு சிப்ஸ் வரை அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். உலகமயமாக்கலில் காந்தியின் பொருளாதரம் காற்றில் பறந்து கால் நூற்றாண்டு ஆகப்போகிறது.

கொள்கை 2 :  மதுவிலக்கு

மதுவிலக்கு அமல்..ரத்து என்ற வசனங்கள் எல்லாம் மாறிப்போய் மதுக்கடைகளை அரசே நடத்தும் காலம் இது.  தமிழகத்தில் வீட்டுக்கு ஒரு வண்ண தொலைக்காட்சி பெட்டியும் ஒரு குடிகாரனும் கட்டாயம் உண்டு. இரண்டுக்கும் உபயம் தமிழக அரசு. இந்தியாவில் மதுவிலக்கு எந்த மாநிலத்திலும் அமலில் இல்லை என்பது நிதர்சனம்.

கொள்கை 3 :  மாமிசம் உண்ணாமை

பசு வதை மிகப்பெரிய பாவமாக பார்க்கப்பட்ட நாட்கள் போய், இன்று பட்டிதொட்டி யெங்கும் பீப் பிரியாணி கடைகள் பட்டையை கிளப்புகின்றன்.  கோயிலுக்குள்ளேயே கோழி, ஆடு பலியிடுவதை தடைசெய்ய முடியவில்லை. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

கொள்கை 4 : அகிம்சை

உலகமே குறுக்கே நின்றபோதிலும் கடத்தல் வழியிலாவது செய்தே தீருவோம் என்று அனுகுண்டு செய்து வைத்திருக்கிறது  இந்திய அரசு. உலகத்தின் தேவை அப்படி. பிறநாடுகளை விட்டுவிடுங்கள். உள்நாட்டிலேயே வாழ்வாதாரம் தேடி போராடும் நக்சல்களை நசுக்கவும் ஆயுதம் இன்றி அரசால் போராட முடியவில்லை.

கொள்கை 5 : மதசார்பின்மை

காந்தியின் மதசார்பின்மை வித்யாசமானது. ஜின்னாவை முதல் முறை சந்திக்கும் போதே ‘ஒரு முஸ்லீம் தலைவரை சந்திப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று அவருக்கு மத முத்திரை இடுகிறார்.  எப்போதும் முஸ்லீம்களையும் இந்துக்களையும் வேறுபடுத்தி அடையாளப்படுத்துகிறார். ஆனால் அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார்.  இதே சவசவ மதசார்பின்மையை தான் இந்திய அரசும் வழி தொடர்கிறது. காந்தி பிறந்த குஜராத்திலேயே ரத்தம் கொட்டிக்கொண்டே இருக்கிறது. மதச்சார்பின்மை என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரசும் ஆரம்ப காலம் முதல் முஸ்லீம் லீக் கட்சியிடன் கூட்டணி வைத்துக்கொள்கிறது.

கொள்கை 6 : சாதி மறுப்பு

இதிலும் மதசார்பின்மை பாணியில் சாதிகளை அடையாளப்படத்திவிட்டு பின் அவர்களை ஒற்றுமையாக வாழ வைக்க முயல்கிறார் காந்தி.  ஹரிஜன்ஸ் என தாழ்த்தபட்டவர்களுக்கு அவர் வைத்த அடையாள பெயரை அவர்களே இன்று ரசிக்கவில்லை. தலித் இயக்கம், தாழ்த்தப்பட்டவர்கள் இயக்கம் என்பதே அவர்களை குறிக்கும் சரியன இடுசொல்லாக இருக்கிறது.  காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் அந்த பகுதியில் அதிகமாக உள்ள சாதியினர் யார் என்பதை கொண்டே வேட்பாளரை அறிவிக்கின்றது. சாதிக்கட்சிகளுடன் கூட்டணியும் வைக்கிறது.  தேர்தல் முதல் வேலை வரை அம்பேத்கரும், பெரியாரும் விதித்த இடஒதுக்கீடு முறையே உண்மையான சமுகநீதி மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.

உலக நடைமுறையில் காந்தியம் சுத்தமாக தோல்வியடைந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகிவிட்டது.

காந்தியமும் கடவுள் போல் தான். இருந்தா நல்லாயிருக்கும் .. ஆனா இல்லையே !!

கடவுள்-காந்தி இருவரும் அவர்கள் பெயரைச் சொல்லி சிலர் பிழைப்பு நடத்துவதர்க்குத்தான் பயண்படுகிறார்கள்.

ஜூன் 5, 2010

இப்படியாக உலகம் !!

Filed under: உண்மை — குறிச்சொற்கள்: — arunprabhus @ 7:19 முப

வழவழ கொழகொழ சவசவ அரசியல்வாதிகளையும் போராட்டக்காரர்களையும் ரசிக்கும் அரசாங்கங்கள், நேர்மையுடன் போராடும் எந்த எழுச்சியாளர்களையும் ஏன் அங்கீகரிப்பதில்லை. அதுவும் அவர்கள் வாழும் காலத்தில் முடிந்த அளவு அவர்களை படுத்துகிறது.

வெள்ளையரின்  ‘Defence of India Act’ அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் குண்டு வீசும் போதும், கவனமாக திட்டமிட்டு எந்த உயிரிழப்பும் இல்லாமல் அதை செய்கிறார் பகத்சிங்.  ‘it takes a loud voice to make the deaf hear’ என துண்டு பிரசுரம் வீசி தன் செயலின் காரணத்தையும் சொல்லிவிட்டு போகிறார்.

ஆனால் ‘கலவரத்தை தவிர்க்க லாகூர் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கிலிடுங்கள் என ஆங்கிலயருக்கு ஆலோசனை தருகிறார்’ கரம்சந் காந்தி. ‘The government certainly had the right to hang these men’ என்று எழுதுகிறார் அந்த அகிம்சா மூர்த்தி.

முதல் ஒத்துழையாமை இயத்தின்  தீவிரத்தை குறைக்க ஏற்படுத்தபட்ட ‘காந்தி-எர்வின்’ சமரச ஒப்பந்தத்தில் பகத்சிங்கின் தூக்கு பற்றி எதுவும் குறிப்பிடாமல் அனைவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கியது காங்கிரஸ் மற்றும் வெள்ளையர் அரசாங்கம். (சான்று : வீக்கி – http://en.wikipedia.org/wiki/Bhagat_Singh)

இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்று ஒலித்த பகத்சிங்கின் குரல்வளையை 23 வயதிற்குள் உலகம் நொருக்கிவிட்டது.

அதே போல் புரண சுதந்திரம் கேட்ட நேதாஜியை விட தங்கள்அரசாங்கத்திற்கு கீழ்படிந்த சுயாட்சி இந்தியா (  ‘domanian status’) கேட்ட காந்தியைத் தான் பிரிட்டிஸ் அரசாங்கத்திற்கு பிடித்தது.   போகும் போது தங்கள் சவசவ அரசியல் நண்பன் காங்கிரஸ் கையில் நாட்டை ஓப்படைத்தது.

பணக்கார குடும்பத்தில் பிறந்து மருந்துவரான சேகுவாரா உலகத்தை பிடித்து ஆட்டிய Imperialism ஒழிய காடுகளிலும் மலைகளில் தரிந்து போராடியவர். அவரை பயங்கரவாதி என்ற அமெரிக்க அரசு மக்கள் செல்வாக்கில்லாத சர்வாதிகாரியான பட்டிஸ்டா (Batista) வை ஆதரித்தது.

பெற்ற அன்னைக்கும் கூடப்பிறந்த உறவுகளுக்கும் கூட எதையும் கொடுக்க விரும்பாத இந்த  சுயநல காலகட்டத்தில், தாங்கள் நேசித்த மண்ணிற்காக தங்களையே  தானம் செய்த தியாகச் சுடர்கள் புலிகள். அவர்கள் ஒவ்வொருவரும் பகத்சிங்காவும், நேதாஜியாகவும், சேகுவாராகவும் வாழ்ந்து மடிந்தவர்கள்.

தாங்கள் நம்பிய தனி ஈழ கொள்கையில் கொஞ்சமும் மாறாமலும் போராட்டத்தின் நேர்மை குறையாமலும் போராடியவர்கள் புலிகள்.

ஊருக்கு நடுவில் ஒளிந்து கொண்டு  கலவரம் செய்யமாட்டர்கள்.  ஊரையே கட்டியாண்டு  தாங்கள் நினைத்த தனிநாடு நடத்துவார்கள். பொதுமக்களுக்கு குண்டு வைத்து அரசியல் நடத்த மாட்டர்கள். தங்களையே குண்டாக்கி அரசியல் எதிரிகளோடு மோதுவார்கள். விமானத்தை கடத்தி பொது மக்களை கொல்ல மாட்டார்கள். துணிந்து இறங்கி ரானுவ விமானத்தளத்தையே பிரித்து மேய்வார்கள்.  மதத்தின் பின்னாலோ.. வல்லரசுகளின் பின்னாலோ ஒளிந்து கொண்டு போர் செய்ய மாட்டார்கள். தங்கள் இன விடுதலைக்காக பிறரை நம்பாமல் தங்களையே பணயம் வைத்து போராடுவார்கள்.

சமசரம் இல்லாத கொள்கை பிடிப்பையும், கொஞ்சமும் விலகாத இந்த நேர்மையையும் தான் உலகம் ரசிக்கவில்லை.

மே 29, 2010

என் செய்வேனோ ?

Filed under: ஈழம் — arunprabhus @ 8:42 பிப
பகத்சிங் நேதாஜி சேகுவாரா பிரபாகரன்

it takes a loud voice to make the deaf hear

ஒரு முழு  ஆண்டு கடந்துவிட்டது.  ஆனாலும் அந்த பாரம் மட்டும் என் நெஞ்சை விட்டு இறங்க மறுக்கிறது.    காதுக்குள் அந்த ஈழ தமிழர்கள் அலறிய அலறல்  கேட்டுக்கொண்டே இருக்கிறது.

உறையாத சிவந்த இரத்தம் படர்ந்த மண்ணும்  செல் அடித்த சுவர்களும் சூழ்ந்த ஒரு மருத்துவமனை கட்டிடமும்,  உயிருடனும் உயிர்இல்லாமலும் தமிழ்ப் பெண்களும் குழந்தைகளும் கீழே பதுங்கியிருக்கும் ஓடாத ஒரு டிராக்டர் வண்டியும் அசைபடமாய் கண்களில் தொடர்ந்து ஓடுகிறது. அதன் பிண்ணணியாக செல்லும் ஆர்ட்டலரியும் வெடித்துத்தெரிக்கும் சத்தங்கள் அடிமண்டையில் ஓங்கி ஓங்கி ஒலிக்கிறது.

இதனிடையே தினமும்  தலைவரின் ஏதோ ஒரு உருவம் மனதில் வந்து போகிறது.  புதிதுபுதிதாக அவரைப் பற்றிய ஏதோ ஒரு சிந்தனை, வருத்தம் தினமும் தோன்றுகிறது.  வேதனையும் வெறுப்பும் மனதில் பாரமாக கனக்கிறது.

கடைசிநாட்களில் அவர் என்ன நினைத்திருப்பார்? போராளிகளிடமும் தளபதிகளிடமும் என் பேசியிருப்பார் ?  மற்ற அதிபர்களின் மகன்களும் மகள்களும் மந்திரிகளாக வீற்றிருக்க, காலமெல்லாம் மக்களுக்காக ஓடி ஓடி போராடிய தேசியதலைவனின் பிள்ளைகளாக துப்பாக்கியுடன் சார்லஸ்யையும், வயிற்றில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு துவாரகாவையும் வழியனுப்பி வைக்க அவனால் எப்படி முடிந்தது.

இவ்வளவும் நடந்த பின்னும் ஒரு சுத்த போராளியாக, தான் நேசித்த தமிழீழ நாட்டின் அடையாள அட்டையும், இயக்கத்தின் சீருடையும் அணிந்து  துப்பாக்கி ஏந்தி கடைசி தோட்டா இருக்கும் வரை எதிரியை பந்தாடிவிட்டு  மறைந்தானா  ?

இந்த கேள்விகளும் காட்சிகளும் நெருப்பாக என் நெஞ்சை எரிக்கிறது.

புலிகளை பற்றி குறைசொல்லும் எவரும்   ‘நாட்டிற்காக நம்முடைய ஒரு உறுப்பையோ அல்லது ஒரு  விரலையோ அல்லது ஒரு வருட சம்பளத்தையோ  கொடுக்க நம் மனம் சம்மதிக்குமா ?’ என்று ஒரு முறை யோசித்து பார்த்தால் அவர்களின் தியாத்தின் அளவு புரியும்.

இன்று இந்தியாவும் சிங்கள தேசமும் இணைந்து மூட்டிய ஈழ போர் நெருப்பு ஆயிரம் ஆயிரம் பகத்சிங்குகளையும், நேதாஜிகளையும், சேகுவாராக்களையும் கருக்கிப்போட்டிருக்கிறது.  நெருப்பாய் உள்ளுக்குள் எரிந்த அந்த தியாச் சுடர்களின் உடல்களும் இன்று நெருப்பில் வெந்து போனது.

அந்த ஒவ்வொரு தியாகியின் முகமும் ஒவ்வொரு நாளும் மனதில் வந்து போகிறது.  ஒரு பெருமூச்சும் துளி கண்ணீரும் அவர்களின் தியாகத்திற்கு காணிக்கையாகிறது. ஈழ செய்திகளையும் கொடுமைகளையும் பற்றி செய்திகளை தவிர்தாலும் அந்த நினைப்பும் தவிப்பும் மனதை கொள்கிறது.

இவ்வளவையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறோமே என்ற ஆற்றாமையும் கோபமும்  மன பாரத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

கோபத்தை வெளிக்காட்ட மே மாதம் கருப்பு சட்டை அணிவதும்,  புலிகள் படத்தை  திரைச்சீலையாக வைத்திருப்பதும், காங்கிரசுக்கு எதிராக வாக்களிப்பதும்,  சில பொதுக்கூட்டங்களில் தொண்டனாக கலந்து கொள்ளவும் தான் முடிகிறது.

புரட்சியாளர்களுக்கும், தியாகிகளுக்கும் என்றுமே கதி இது தானா ? என்ற கேள்வி மனதில் அலையடிக்கிறது. நெஞ்சின் பாரம் மட்டும் குறையாமல் கணக்கிறது.

அந்த பாரம் குறைய என் செய்வேனோ தெரியவில்லை..

Create a free website or blog at WordPress.com.